Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
குளிரூட்டப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான ஐஸ்கீரிம்களை, பொகவந்தலாவ பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைப்பற்றியுள்ளனர்.
டிக்கோயா, புளியாவத்தை நகருக்கு விற்பனைக்காக வாகனத்தில் கொண்டு வந்திருந்த போதே, பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் இவற்றை கைப்பற்றியுள்ளனர். பொது சுகதார அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ்கீரிம் வகைகளை பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் அழித்துள்ளனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026