2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

படகுகள் வழங்கி வைப்பு

சிவாணி ஸ்ரீ   / 2020 ஜூன் 28 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக, சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கு படகுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி படகுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், சப்ரகமுவ மாகாண சபைக் கட்டடத் தொகுதியில், நேற்று (27) நடைபெற்றது.

இதன்போது, வௌ்ளத்துக்கு முகங்கொடுக்கும் இரத்தினபுரி மாநகர சபை,  இரத்தினபுரி, நிவித்திகல, குருவிட்ட, அயகம, கேகாலை மாவட்டத்தில் தெரணியாகலை, ருவான்வெல்ல, தெஹியோவிட்ட ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்குத் தேவையான 50 படகுகள் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .