R.Maheshwary / 2020 நவம்பர் 02 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை இ.போ.ச பஸ் டிப்போவின் 8 பணியாளர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள கொழும்பைச் சேர்ந்த பொலிஸ் அதியாரியொருவருடன் தொடர்பிலிருந்தவர்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பதுளை மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியொருவர், பிசிஆர் அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே, பசறையிலுள்ள டிப்போ பணியாளர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது, பொலிஸ் அதிகாரியின் பிசிஆர் அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டிப்போவில் பணியாற்றும் 8 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Apr 2026