2026 மே 02, சனிக்கிழமை

பலாங்கெடை பிரதேசத்தில் 640 பேர் தனிமைப்படுத்தல்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து, பலாங்கொடை பிரதேசத்துக்கு வருகை தந்த 640 பேர், சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 200 பேர், 14 நாள்களை நிறைவு செய்துள்ளனர் என்றும், சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

கொரோனா ஒழிப்பு குழுவின் குழு கூட்டம்,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், பலாங்கொடை பிரதேச செயலகத்தில், இன்று (8) நடைபெற்றது. இதன்போதே, இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட 640 பேரில், வெளிநாடுகளிலிருந்து பலாங்கொடைக்கு வந்த 103 பேர் உள்ளடங்குகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில், பலாங்கொடை பிரதேச மக்கள், அதிகாரிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும்,  மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை  விநியோகிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .