2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பழமொன்றின் வித்தால் பறிபோன உயிர்

R.Maheshwary   / 2022 ஜூலை 05 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

பழமொன்றின் வித்து  தொண்டையில் சிக்கி 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மொனராகலை- சுதுவத்துபாரயில் வசித்து வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் 28ஆம் திகதி  வீட்டுக்கு அருகிலிருந்த கோன் எனப்படும் மரத்திலிருந்து பழத்தைப்  பறித்து சாப்பிட்ட போது, அதன் வித்து தொண்டையில் சிக்கியுள்ளது.

இதனையடுத்து சிறுவன் உடனடியாக  மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .