2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பஸ் தரிப்பிடங்களை அமைக்க நடவடிக்கை

Editorial   / 2018 ஜூன் 29 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்   

நுவரெலியா மாநகரசபைக்கு உட்பட்ட பல பிரதேசங்களில், பஸ் தரிப்பிடங்கள் இன்மையால், பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனறென, நுவரெலியா மாநகரசபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மாநகர சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.  

இதேவேளை, பல பஸ்தரிப்பிடங்கள், பயன்படுத்த முடியாத  நிலையிலுள்ளமைத் தொடர்பிலும் தமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதெனவும் அவர் கூறினார். எனவே, இதுத் தொடர்பில் கவனஞ்செலுத்தப்படும் என்றுத் தெரிவித்த அவர், பஸ் தரிப்பிடங்கள் இல்லாத இடங்களில், பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள பஸ் தரிப்பிடங்களை, புனரமைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X