2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பஸ் தரிப்பிடத்தைக் காணவில்லை

Editorial   / 2018 மே 06 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ.சண்முகநாதன்

ஹட்டன் செனன் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில், மாணவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த பஸ் தரிப்பிடம், இனந்தெரியாத நபர்களால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள், இதனால், தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களும் பொதுமக்களும் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்களை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில், பஸ் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த பலவருடங்காள இவ்விடத்தில் இருந்த இந்தப் பஸ் தரிப்பிடத்தை, கடந்த மாதத்திலிருந்து காணவில்லை என்றும், இனந்தெரியாத நபர்கள், பஸ்தரிப்பிட்டத்தை அப்புறப்படுத்தியுள்ளனர் எனவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சிரமத்தைப் போக்கும் வகையில், பஸ் தரிப்பிடத்தை மீண்டும் அமைத்துக் கொடுப்பதற்கு, அம்பகமுவ பிரதேச சபை முன்வர வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X