Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே. குமார்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை பிரதேச செயலகத்தின் உதவிப் பிராந்திய செயலாளராக டி.எம்.டி.பி.தசநாயக்க, வியாழக்கிழமை (12) பதவியேற்றார்.
இலங்கை நிர்வாக சேவையில் மூன்றாம் தர அதிகாரியான இவர் இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட செயலகம், யட்டிநுவர பிரதேச செயலகம் மற்றும் விவசாய திணைக்களம் ஆகியவற்றில்
முகாமைத்துவ சேவை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அத்துடன், புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் உதவி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
பதவியேற்கும் நிகழ்வில் கொத்மலை பிரதேச செயலாளர் நதீரா லக்மால் மற்றும் அலுவலக அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
10 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago