2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புசல்லாவையில் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 20 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறும், விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான உரிய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி  தமிழ் முற்போக்கு கூட்டணியால் புஸல்லாவை நகரில் நேற்று முன்தினம் (18) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச்செயலாளருமான வேலுகுமார்  தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .