Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 ஜூலை 19 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என அழைக்கப்படும் மலையக உழைக்கும் சமூகம் நாட்டிற்கு அன்னிய செலாவணியை கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியுள்ள போதிலும், அவர்கள் வசதி குறைந்த நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால், பள்ளிகளுக்குச் செல்வதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளதாகவும், மேலும், குறைந்த சுகாதார வசதிகளின் கீழ் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், வறுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கம் பாடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களை அந்தப் பெயரால் அழைப்பதை விட மலையக உழைக்கும் சமூகம் என்று அழைப்பதே சிறந்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
52 minute ago
2 hours ago