2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மாணவன் மீது கத்திக்குத்து: ஒருவர் கைது

Kogilavani   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கட்டுகஸ்தோட்டைக்கு உட்பட்ட பாடசாலையைச் சேர்ந்த மாணவரொருவரை கத்தியால் குத்தியக் குற்றச்சாட்டில், அதேபாடசாலையில் பிரிதொரு தரத்தில் கல்விக் கற்றுவரும் மாணவனை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், இன்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
 
வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தரம் 11இல் கல்விக் கற்றுவரும் மாணவர் தலைவரொருவரே, படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனை சத்திரசிகிச்சைக்கு உடுபடுத்தியபோது, கத்தியின் இரண்டு அங்குல நீளமான பகுதி மீட்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .