Sudharshini / 2016 ஜூன் 05 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
டிக்கோயா, அராபி பாடசாலையின் கட்டட தொகுதியில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, பசரை, லுணுகலை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம். ஜெயரத்ரத்நாயக (வயது 60) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (04) மாலை மேற்படி பாடசாலைக்கு மின் இணைப்பை பெற்றுக்கொடுப்பதற்காக, மூங்கிலினால் செய்யப்பட்ட ஏணியின் மீது ஏறி, வேலை செய்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளது.
சடலம் டிக்கோயா மாவட்ட iவைத்தியசாலையின் பிரேத அளையில் வைக்கப்பட்டுள்ளது என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .