2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மான் வேட்டை; ஒருவர் கைது, 14 பேருக்கு அழைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை, என்போட் தேயிலை தோட்டத்தில்  மான் குட்டியொன்று வேட்டையாடப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவ்விடத்துக்கு வந்த லிந்துலை பொலிஸார் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன்  ஏனைய 14 பேரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரும்படி பணித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று (14) பகல் தோயிலைத் தோட்டத்தில்  தொழிலாளர்கள்  வேலை செய்துக்கொண்டிருந்த போது, அங்கு மான் குட்டியொன்று மேய்ச்சலுக்காக வந்துள்ளது. அதை அவதானித்த தொழிலாளர்கள் மான்குட்டியை விரட்டியுள்ளனர்.

எனினும் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பை ஏற்படுத்திய ஒருவர், மான் குட்டியை தொழிலாளர்கள் வேட்டையாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 குறித்த தகவலையடுத்து அங்கு வந்த பொலிஸார், வேலை செய்துக்கொண்டிருந்த ஒருவரை தாக்கியதாகவும் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் ஏனைய 14 பேரையும் பொலிஸ்  நிலையத்துக்கு வரும்படி பணித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும், தவறான ஒரு தகவலின் அடிப்படையிலே பொலிஸார் தொழிலாளர்களின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என அவர்கள் குறிப்பிட்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X