Sudharshini / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சியொன்றை வடமாகாண சுற்றாடல் அமைச்சி ஏற்பாடு செய்துள்ளது.
வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) வியாழக்கிழமை (05) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும் புதன்கிழமை (11) வரை நடைபெறவுள்ளது.
இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா திறந்து வைக்க உள்ளார்;. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள் தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில், நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டு மரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள் என்பன காட்சிப்படுத்தப்படுவதோடு விற்பனையும் செய்யப்படவுள்ளன.
தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.


21 minute ago
4 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
18 Apr 2026