2025 ஜூன் 28, சனிக்கிழமை

மிளகாய்த்தூள் வீசி ரூ.34 இலட்சம் கொள்ளை

Sudharshini   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

முச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த இராணுவ அதிகாரியின் முகத்தில், மிளகாய் தூளை வீசிவிட்டு அவரிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தையும் முச்சக்கர வண்டியையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று பதுளை புற நகர்ப் பகுதியில் புதன்கிழமை மாலை (30) இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, பதுளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .