2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மண்சரிவு அபாயமா?: உடன் அழைக்கவும்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சாமிவேல் சுதர்ஷினி

'மலையகத்தில் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள், அதுதொடர்பில் உடனடியாக அறியத்தந்தால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்' என மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

'தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலைக் காரணமாக மலைகத்தில் பெருமளவிலான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றது. எனவே, அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளிலுள்ள மக்கள், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 011 -2380859 என்ற இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அறியத்தர முடியும்' என அவர் குறிப்பிட்டார்.

'இவ்வாறு அறியத்தரும் போதே  அதற்கு  உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X