Freelancer / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற லொறியுடன் நபரொருவர் ஹட்டன் பொலிஸாரினால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரத்தில் திகதி தெளிவாக குறிப்பிடாது. கித்துல்கல பகுதியில் இருந்து நோர்வூட் பகுதிக்கு மணலை கொண்டு செல்லும் போது ஹட்டன் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், அவரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago