Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2018 மே 28 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
பெல்மதுளை பிரதேசத்தில், 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு, இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரிகளாலும் மாணிக்கக்கல் அகழ்வுத் தொழிலாளர்களாலும் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட 10 வீடுகள், மக்களிடம் நேற்று (27) கையளிக்கப்பட்டன.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கு, பெல்மதுளை இயலபோபிட்டிய பிரதேசத்தில் உள்ள அரச காணியில், 20 மில்லியன் ரூபாய் செலவில் 10 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
17 Jun 2025