2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மலசலகூடத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

Mayu   / 2024 ஜூன் 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செ.திவாகரன், டி,சந்ரு

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பீடத்தில் உள்ள பொது  மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர்  ஒருவரின் சடலம்  புதன்கிழமை (26) இரவும், பொகவந்தலாவை ஆரியபுரவைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலம், வியாழக்கிழமையும் (27) மீட்கப்பட்டுள்ளது என    பொலிஸார் தெரிவித்தனர்.

மலசல கூடத்தில் இருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு வழங்கிய தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்தவர்கள் இருவரும்  உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X