2025 ஜூன் 28, சனிக்கிழமை

மலர் மாநாடு இன்று

Sudharshini   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமையத்தின் (சார்க்) நாடுகளில் மலர் விற்பனையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, தீர்வு காணும் நோக்குடன் சார்க் நாடுகளது துறைசார் நிபுணர்களின் மாநாடு, கண்டியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கண்டி, தங்கொல்ல ரந்தோலி ரிசோட் ஹோட்டலில், புதன்கிழமை வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில், சார்க் நாடுகளது துறைசார் நிபுணர்கள் கலந்துகொள்ள உள்ளதாக விவசாய திணைக்களத்;தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

'மலர் உற்பத்தியில் மேற்கத்தேய நாடுகள் மற்றும் சார்க் பிராந்திய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.

இந்நாடுகளில் விவசாயிகள் மலர் உற்பத்தியில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .