Editorial / 2025 ஜூன் 01 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக ரயில் பாதையில் கலபொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை தடம் புரண்டதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பதுளையிலிருந்து -கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலின் முன் எஞ்சின் தடம் புரண்டுள்ளது.
மலையக ரயில் பாதையில் ரயில் நடவடிக்கைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட ரயிலைத் தடத்தில் ஏற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறையின் தெரிவித்துள்ளது,
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago