2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக பிடிவிறாந்து

Editorial   / 2018 மே 23 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா           

பணமோசடியுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூரத்திக்கு எதிராக, பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி நயந்த சரதுங்க, நேற்று முன்தினம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

அரச தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, இருவரிடம் இரண்டரை இலட்ச ரூபாய் பணத்தை  மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில், மேற்படி உறுப்பினருக்கு எதிராக, ஹாலிஎல பொலிஸார், பதுளை மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, குறித்த வழக்கு விசாரணைக்கு மேற்படி உறுப்பினர் ஆஜராகமையால், நீதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .