2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

மாணவியின் தங்க நகை அபகரிப்பு

Janu   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை  பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திங்கட்கிழமை (01) அன்று தனது பிரத்தியேக வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, ​​இனந்தெரியாத ஒருவர் அவரது கழுத்தில் இருந்து தங்க  சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.

 19 வயதுடைய குறித்த மாணவி தனது பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு நக்கல்ல தோட்ட  பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு நபர் அவரது பின்னால் வந்து அவர் அணிந்திருந்த  தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.    

இது ​தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .