2026 மே 06, புதன்கிழமை

மாணிக்கக்கல் தோண்டிய எழுவர் கைது

எஸ்.சதிஸ்   / 2019 மார்ச் 19 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ, கொட்டியாகலை என்.சி தோட்டத்தில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை, பொகவந்தலாவ பொலிஸார், நேற்று (18) கைது செய்துள்ளனர்.  

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த 7 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, மாணிக்கக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்திய சில உபகரணங்களையும், பொலிஸார் மீட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்​டோர், பொகவந்தலாவ, கொட்டியாகலை, மோர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை ​முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .