2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

மூன்று வாகனங்கள் மோதி விபத்து

மொஹொமட் ஆஸிக்   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - மாத்தளை வீதியில், நேற்று (28), மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு இடம்பெற்ற விபத்தில், மூவர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிங்குராங்கெத்த பகுதியிலிருந்து கண்டியிலுள்ள உறவினர் வீடொன்றுக்கு வந்த வான் ஒன்று, அம்தென்ன பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது, இழுத்துச் செல்லப்பட்ட லொறி, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியுள்ளது.

வானின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்குக் காரணம் என்று, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .