2025 மே 14, புதன்கிழமை

மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியை காணவில்லை

Freelancer   / 2023 மார்ச் 16 , பி.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவளவின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி காணாமல் போய் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மேற்குறிப்பிட்ட விசேட அதிதிகளின் மெய் பாதுகாவலர், குறித்த துப்பாக்கியை பையில் வைத்து இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவளவின் பலாங்கொடை இல்லத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் வைத்து விட்டு தாம் விடுமுறையில் சென்றுள்ளார்.

விடுமுறை முடிந்தது மீண்டும் தான் கடமைக்காக வந்தபோது குறித்த பையில் துப்பாக்கி இருக்கவில்லை என்பதால், இந்த விடயம் குறித்து பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X