2025 ஜூன் 28, சனிக்கிழமை

லெமன்மோரா மசியவே இல்லை

Editorial   / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மஸ்கெலியா, லெமன்மோரா தோட்ட மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம், 10ஆவது நாளாகவும் நேற்றும் (28) முன்னெடுக்கப்பட்டது.

தங்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகளை தோட்ட நிர்வாகம் வழங்க வேண்டுமென தெரிவித்து, மேற்படி தோட்ட மக்கள், கடந்த 18ஆம் திகதி முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.   

தனியாருக்குச் சொந்தமான லெமன்மோரா தோட்டத்தில், 32 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர்.   

ஆரம்பத்தில் 188 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டிருந்த போதிலும் தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு அத்தோட்டத்தை காடாக்கி வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அம்மக்கள், தற்போது 20 ஏக்கர் நிலத்திலேயே, தேயிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.   

தற்போது அங்கு மாட்டுப்பண்னை ஒன்றை அமைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதால், 20 ஏக்கரில் காணப்படும் தேயிலையையும் தோட்ட நிர்வாகம் பராமரிக்காமல், வேண்டுமென்றே காடாக்கி வருவதாகவும் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.   

இந்நிலையில், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை தமக்கு முறையாகச் செலுத்த வேண்டும், முறையாக வேலை வழங்க வேண்டும், வீடமைப்புத் திட்டத்துக்குக் காணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள மக்கள், தோட்ட நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென வலியுறுத்தியே, தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.   

தொழிற்சங்க பேதமின்றி தாம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தோட்ட நிர்வாகம் அசமந்தப் போக்கையே காட்டி வருவதாக, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 நாட்களாகப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், தோட்ட நிர்வாம் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று, அம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   

எனவே, தமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென்று, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .