2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

லொறி குடைசாய்ந்தது; ஐவர் காயம்; மூவரின் நிலைக் கவலைக்கிடம்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கி எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று, இன்று (27) பகல் துன்ஹிந்த பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஐவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி உட்பட ஐவரே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில்  மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்துத் தொடர்பில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .