2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் 16 பேர் காயம்

Kogilavani   / 2017 மார்ச் 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவாளை-ஊருபெலப்பிட்டிய பிரதேசத்தில், வானொன்று இன்றுக் காலை 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 16 பேர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெரணியகலையிலிருந்து தெஹியோவிட்டப் பகுதிக்கு, மரண வீடொன்றுக்கு, பயணிகளை ஏற்றிச் சென்ற வானே, இவ்வாறு 50 அடி  பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக்கலக்கமே, இவ்விபத்துக்குக் காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில், 8 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக, அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .