2025 ஜூலை 09, புதன்கிழமை

வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத குழுவால் தொழிலாளர்கள் அச்சம்

Editorial   / 2025 ஜூலை 09 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா- தரவல மாணிக்கவத்தை தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு இனந்தெரியாத குழுவினர் இரவில்   வீடுகளுக்குள் நுழைந்ததால் அம் மக்கள்  பீதியடைந்துள்ளனர்.

முகத்தை மூடிய ஒரு குழு, விடியற்காலையில் தோட்ட வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளை திறந்து வீடுகளுக்குள் நுழைந்து வீடுகளுக்குள் சுற்றித் திரிவதாக தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அந்த நேரத்தில் மின்சார விளக்குகளை எரியவிட்டாலும்   மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்தக் குழுவை அடையாளம் காண முடியவில்லை, எனவே அக்கம்பக்கத்தினர் உதவிக்காக கூச்சலிடும்  போது அந்தக் குழு தப்பி ஓடுகிறது.

இந்தக் குழு எதற்காக தங்கள் வீடுகளுக்குள் வந்து தோட்டத் தொழிலாளர்களை பயமுறுத்துகிறது என்பது எங்களுக்குத் தெரியாது என்றும், இது குறித்து தோட்ட மேலாண்மை அதிகார சபை மற்றும் ஹட்டன்  பொலிஸார் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்த பிறகு, இரவில் தோட்டத்தில் சுற்றித் திரியும் குழுவைப் பிடிக்க தோட்ட வீடுகளில் தங்கள் தோட்ட இளைஞர்கள் காவல் காத்து வருகின்றனர் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவரின் கால் தடம் வீட்டில் பதிவாகியுள்ளதாகவும், மற்றொரு வீட்டில் உள்ள பாதுகாப்பு கேமராவில் அந்த நபர் முகத்தை மூடிக்கொண்டு நடந்து செல்வது தரவு அமைப்பில் பதிவாகியுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, தோட்டத் தொழிலாளர்கள் அன்றாட வேலைக்கு தேயிலை தோட்டத்திற்குச் செல்ல அச்சபடுவதாகவும், தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளும் பாடசாலைக்குச் செல்ல தயங்குவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .