2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

வன்முறைகளை கண்டித்து விழிப்புணர்வு

Freelancer   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
எஸ்.கணேசன்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மலையகத்தின் பல பாகங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் புரொடெக்ட் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வுகள் நோர்வூட் நகரில் நேற்று (05) இடம்பெற்றன.

பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான புரொடெக்ட் அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நோர்வூட் நகரில் வீதி நாடகமும், விழிப்புணர்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அரச சார்பற்ற அதிகாரிகள், சிவில் அமைப்பினர், உட்பட புரொடெக்ட் அமைப்பின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பெண்கள், சிறார்கள் என பலரும் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X