Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 15 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை நகர சபையில் இதுவரை வரிசெலுத்த தவறியவர்கள், இம்மாதம் 30ஆம் திகதி வரை வரி செலுத்த முடியுமெனவும், அவ்வாறு செலுத்த தவறுவோரின் சொத்துக்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுமெனவும் நகரசபை செயலாளர் அஜித் புஷ்பகுமார, இன்று (15) தெரிவித்தார்.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வரி செலுத்தும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சபைக்கு செலுத்தப்படாத வரிகள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வரி செலுத்துபவர்களின் நலன் கருதி நடமாடும் சேவைகளையும் மேற்கொண்டு வருவதுடன் தலவாக்கலை நகரசபையில் விசேட காரியாலயமும் இயங்கி வருவதாக செயலாளர் தெரிவித்தார்.
நகர சபைக்கு செலுத்த வேண்டிய வீடு, வியாபார நிலையம், தொழிற்சாலை வரிகள் உள்ளிட்ட அசையும் அசையா சொத்துக்களின் வரிகளை காலம் தாழ்த்தாது சபைக்கு செலுத்த வேண்டுமென பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.
நகரசபையின் ஊடாக எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் பல வகுக்கப்பட்டுள்ள நிலையில், வரிசெலுத்துவோர் கடமை உணர்வுடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago