Simrith / 2023 ஜூலை 19 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு வருடங்கள் கடந்துள்ளதாக தெரிவித்த கல்வி அவர், இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொட்டகலை பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .