Editorial / 2018 மே 23 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி மாநகர சபைக்குச் சொந்தமான தங்கொல்லை விளையாட்டு மைதானத்தைப் புனரமைப்பதற்காக, 200 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கண்டி மாநகர சபை உறுப்பினர் கெமுனு கிரிந்தே தெரிவித்தார்.
மாநகர சபையின் விளையாட்டு குழுவுக்கு, தான் சமர்ப்பித்த பிரேரணையின் அடிப்படையில், அரச முதலீட்டு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல, இதற்கான நிதியை ஒதுக்கீடுச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கண்டி நகரபிதா கேசர சேனாநாயக்க, இதற்கான மேலதிக உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .