Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், எஸ்.கணேசன், கு.புஷ்பராஜ்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை வெலிங்டன் தோட்டத்தில், நேற்று (24) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என்றும் மற்றொரு வீடு பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு வீடுகளிலும் உள்ள 8 பேர், தற்காலிகமாக, உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் எனினும், மின் கசிவு காரணமாக, இந்தத் தீ விபத்து இடம்பெற்றிருக்கும் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது, வீட்டில் யாரும் இருக்கவில்லை என்றும் பின்னர், தீ எரிவதைக் கண்டே, அயலவர்கள் ஓடி வந்து, தீணை அணைக்க முயன்றுள்ளனர் என்றும் எனினும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதமையால், வீடு முற்றாக சேதமடைந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்த வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், ஆடைகள் உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் என, அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago