2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஸ்டெதன் தோட்ட மக்களுக்கு மாற்றுக் காணிகள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்  

மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஹட்டன், ஸ்டெதன் மேல் பிரிவைச் சேர்ந்த தோட்ட மக்களுக்கு, மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று (24) உறுதியளித்துள்ளார்.

மண்சரிவு அபாயம் காரணமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மேற்படித் தோட்டமக்களை, இன்று (24)  நேரடியாகச் சந்தித்து உரையாற்றும்போதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஸ்டெதன் மேற்பிரிவைச் சேர்ந்த மக்கள், தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைத் தொடர்பில் நான் நன்கு அறிவேன்” என்றார்.

மேற்படி மக்களுக்கான மாற்றுக் காணிகளை, தோட்டத்தின் 19ஆம் இலக்க மலையில் பெற்றுக்கொடுப்பதற்கு, பெருந்தோட்டக் கம்பனியோடு கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகளை வரவழைத்து, குறித்த காணித் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நுவரெலியா மாவட்டச் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கைக் கிடைத்ததன் பின்னர்,  ஸ்டெதன் மேல்பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு, குறித்த காணி கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .