Princiya Dixci / 2016 ஜூன் 04 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகலப் பகுதியில் அன்று சனிக்கிழமை (04) காலை 11.45க்கு பாரிய மரத்தின் கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், மரத்தை வெட்டி அகற்றுவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .