2024 மே 02, வியாழக்கிழமை

ஹேண்ட்ஸ் ஃப்ரீ அணிந்து சென்ற மாணவன் ரயிலுக்கு பலி

Janu   / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன்  பேராதனை, பெனிதெனிய   பிரதேசத்தில் வைத்து  ரயிலில் மோதி  உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  கலைப் பீடத்தில் , சட்டக் கல்வி கற்கும்  வாத்துவ பிரதேசத்தை சேர்ந்த சித்சரத சில்வா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . 

குறித்த மாணவன் ,ஹேண்ட்ஸ் ஃப்ரீயை (hand free ) தனது காதில் அணிந்துக்கொண்டு  ரயில் பாதையில் நடந்துக்கொண்டிருக்கும்போது  நாவலப்பிட்டி -  கண்டி ரயிலில் மோதியே இவ்விபத்து  ஏற்ப்பட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .

மேலும் இது  தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை  பேராதனை  பொலிஸார்  மேற்கொண்டு  வருவதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .