2025 ஜூன் 23, திங்கட்கிழமை

போர்க்கோழி மைதானம் சுற்றி வளைப்பு; 7பேர் கைது; 23 வாகனங்கள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

இரகசியமான முறையில் நீண்டகாலமாக இயங்கி வந்த போர்க் கோழி பந்தயத் திடலொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 7 பேரைக் கைது செய்ததுடன் ஏழு கோழிகளையும் 23 வாகனங்களையும் கைது செய்த சம்பவமொன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு, கதிரானை, சங்வர்தனவத்தை பிரதேச காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இந்த போர்க் கோழி மைதானம் இரகசியமான முறையில் பந்தயத்திற்காக இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக இயங்கி வந்த இந்த போர்க்கோழி மைதானம் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது அங்கிருந்து பலர் தப்பியோடியுள்ளனர்.

அத்துடன் உரிமையாளர்கள் முன்வராததன் காரணமாக 10 முச்சக்கர வண்டிகளும், 12 மோட்டார் சைக்கிள்களும் ஒரு வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஏழு சண்டைக் கோழிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் ஒரு கோழியின் பெறுமதி 15 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரையானது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் வரத்தகர்களே இங்கு வந்து சட்ட விரோத பணப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தினமும் பல இலட்சம் ரூபாவுக்கு இங்கு பந்தயம் பிடிக்கப்படுகிறது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .