2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

போதை மாத்திரைகளை விற்பனை செய்த 8 பேருக்கு அபராதம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை பொருளுக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்த ஐந்து பெண்கள்  உட்பட  8 பேருக்கு  நீர்கொழும்பு மேலதிக நீதவான் நேற்று வியாழக்கிழமை 20 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதித்தார்.

நீர்கொழும்பு அரிச்சந்திரபுர மற்றும் கட்டானை ருக்கத்தன பிரதேசத்தை சேர்ந்த பிரதிவாதிகளுக்கே மேற்படி அபராதத் தொகை விதிக்கபட்டது. இவர்கள் அனைவரும் கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளககமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.

இதற்கு முன்னர் இதே குற்றச் செயலை புரிந்த இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாவும், ஏனையோருக்கு தலா 20 ஆயிரம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் இதே குற்றச் செயலை மீண்டும் செய்தால் சிறை தண்டனை விதிக்கப்படு;ம் எனவும் பிரதிவாதிகளை நீதவான் எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .