2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

குடாப்பாடு பகுதியில் கைதான 10பேருக்கும் பிணை; நீதிமன்ற முன்றலில் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 மே 10 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்திலிலிருந்து கைது செய்யப்பட்ட 10பேரையும் பிணையில் செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, குறித்த பிரதேச கடலோரப் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்டு சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது பிள்ளைகள் விளையாடுவதற்காக உள்ள கடற்கரைப்பகுதி தனியாருக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் பிரதேசவாசிகள் ஈடுபட்டனர்.

வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுமதிலை கடந்த செவ்வாய்க்கிழமை உடைத்து நாசமாக்கியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த 10 சந்தேக நபர்களும் இன்று நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

இதேவேளை சுற்றுமதிலை கடந்த செவ்வாய்க்கிழமை உடைத்து நாசமாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த 10 சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் இன்று பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 5 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 10 சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர். குடாப்பாடு பிரதேசத்தை சேர்ந்த 6 பெண்களும் 4 ஆண்களுமே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

இதேவேளை நீதிமன்றின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோரை களைந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டதை அடுத்து பொலிஸார் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .