2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'நாற்றத்தால்' பாடசாலை 3 மாதங்களுக்கு மூடப்பட்டது

Kanagaraj   / 2013 ஜனவரி 02 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

துர்நாற்றத்தினால் பாடசாலையொன்று நேற்று புதன்கிழமைலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்பட்ட சம்பவம் ஒன்று கொலன்னாவை கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ளது.

கொலன்னாவை ராஹுல வித்தியாலயமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள் வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பகுதியிலேயே கொட்டப்படுகின்றது.

அந்த குப்பை மேட்டுக்கு அண்மையில் இருக்கின்ற ராஹுல வித்தியாலத்தில் கல்விபயிலும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததையடுத்தே குறித்த பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு மாற்றிவிட்டு அந்த பாடசாலையை மூன்று மாதங்களுக்கு மூடிவிடுவதற்கு தீர்மானித்ததாக கொலன்னாவ கல்விவலய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .