2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பில் மதிலை சேதப்படுத்திய, தென்னை மரங்களை வெட்டியமை தொடர்பில் 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 10 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு, குடாப்பாடு கடற்கரையோரத்திலுள்ள வீடொன்றின் சுற்று மதிலை உடைத்து சேதமாக்கிய மற்றும் அங்கிருந்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய சம்பவங்கள் தொடர்பில் 10 பேர் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கரையோரத்திலிருந்து 50 மீற்றர் தொலைவிலும் குடாப்பாடு தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரையோரத்தில் அமைந்துள்ள  இவ்வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதில் உடைத்து சேதமாக்கப்பட்டதுடன், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .