2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தொலைபேசி கொள்ளையடித்த சந்தேக நபரின் தொலைபேசி நீதிமன்றில் ஒலித்ததால் 1500 ரூபா அபராதம்

Super User   / 2012 மே 11 , பி.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

செல்லிடத் தொலைபேசி கொள்ளை தொடர்பாக நீதிமன்றில் ஆஜரான நபர் ஒருவரின் செல்லிடத் தொலைபேசி நீதிமன்ற அறையில் ஒலித்ததால் அவருக்கு 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கந்தப்பளையை சேர்ந்த நபர் ஒருவருக்கே  நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீதவான் கனிஷ்க விஜேரட்ன நேற்று வெள்ளிக்கிழமை இந்த அபராதத்தை விதித்தார்.

காலிமுகத் திடலில் 8 வயது சிறுவனொருவன் தனது பெற்றோருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அச்சிறுவனிடமிருந்து 20,000 ரூபா பெறுமதியான செல்லிடத் தொலைபேசியை அபகரித்ததாக இந்நபர் மீது குறு;றம் சுமத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .