2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பஸ் நிலையத்தில் புகைப்பிடித்த பஸ் நடத்துனருக்கு 2000 ரூபா அபராதம்

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

கொள்ளுப்பிட்டி பஸ் தரிப்பிடத்தில் புகைப்பிடித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பஸ் நடத்துனர் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 2000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

இவர் புகைப்பிடித்து கொண்டிருக்கும்போது கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவரை  கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரட்ன முன்னிலையில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.

இவர்  கொள்ளுப்பிட்டி பஸ் தரிப்பிடத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை விளைவிக்கும் வகையில் புகைப்பிடித்துக்கொண்டிருந்ததாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பஸ் நடத்துனர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு நீதவான் 2000 ரூபா அபராதம் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .