2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

48 மணி நேரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 22 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றத்தின் உத்தரவின்றி பொலிஸார் 48 மணி நேரம் தடுத்துவைக்கும் வகையிலான புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை இந்த சட்டமூலத்தின் இராண்டாம் வாசிப்பே நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது.முன்னிலை சோஷலிச கட்சியினர் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்காக 15 வகையான தவறுகள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் முன்னிலை சோஷலிச கட்சியினரால் நேற்று திங்கட்கிழமை  கொழும்பு, கோட்டை பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. (படங்கள்: சமந்த பெரேரா)








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .