2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் 5 வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.சாஜஹான்


நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதாரப் பிரிவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நகர மத்தியில் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ண்ஹக்ட்டல்களையும் வர்த்தக நிலையங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

பழுதடைந்த இனிப்புப் பண்டங்கள் உள்ளிட்ட  உணவுப் பொருட்கள், பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட காலாவதியான உணவுப் பொருட்கள், சுகாதாரமற்ற வகையில் விற்பனைக்கு வைத்திருந்த உணவு வகைகள் என்பன இந்தச் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்த 5 வர்த்தக நிலையங்களுக்கு  எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளன. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார்.

சிலருக்கு அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .