2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அல் முபாரக் தேசிய பாடசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.எம்.பௌஸான்


மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் பாடசாலை தினம் ஆகியன கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.ஜே.எம்.புர்கான் தலைமையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அனர்த்த நிவாரண சேவைகள் பிரதி அமைச்சரும் பியகம தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் துலிப் விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்,   மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா, மேல் மாகாண சபை உறுப்பினர்களான குணசிறி ஜயனாத் மற்றம் ஷாபி ரஹீம், மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாடசாலையின் பழைய மாணவர்கள் எம்.எம்.ஏ.கபூர், லபர் தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காலை 8.00 மணிக்கு ஆரம்பமான நடை பவனியை பழைய மாணவர் சங்கத் தலைவர் அஜ்மல் ஹூஸைன் ஆரம்பித்து வைத்தார். இந்த நடைபவனி மல்வானை பிரதேசத்தை சுற்றி 10 கிலோ மீற்றர் வலம் வந்ததோடு இரண்டாம் கட்ட நிகழ்வின்போது நாட்டின் நூலா பாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த பாடசாலையின்   

முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலைக்காக கட்டடங்களை அமைத்துக்கொடுத்த மற்றும் பாடுபட்ட மூத்த பழைய மாணவர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின்போது பாடசாலையின் பழைய மாணவர்களால் சுமார் 15 இலட்சம் வரை நன்கொடைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .