2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

Super User   / 2011 ஜனவரி 05 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கொழும்பு தமிழ் சங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிமை வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ், சிறுவர் இலக்கியம், மகளிர் மற்றும் பல்துறை ஆகிய பிரதான பிரிவுகளின் கீழ் ஆய்வரங்குகள் நடைபெறவுள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொள்ளும் பேராசிரியர்கள், படைப்பாளிகள், புத்திஜீவிகள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளனர்.

45 தென்னிந்திய தமிழ் எழுத்தாளர்கள் உட்பட 100 மேற்பட்ட வெளிநாட்டு எழுத்தாளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 06 January 2011 10:41 PM

    ஏற்பாட்டாளர்களே, ஏன் எனக்கு அழைப்பில்லை?
    இணையத்தில் எழுதுகின்றவர்கள் எழுத்தாளர்கள் இல்லையா?
    ஒரு முக்கியமான பேராளரை இழந்து விட்டீர்கள்!
    மிகவும் வருத்தம்!
    எனது தொண்டை நீங்கள் அங்கீகரிக்கவில்லை.
    நான் தொண்டை கிழிய கத்துவதில்லை என்பதால்
    இன ஒற்றுமைக்கு அன்றாடம் போராடும் எனக்கு அடிப்படைவாதி என்றும் கிளிப்பிள்ளை என்றும் பழங்கதை என்றும் கூறலாமா?
    யாரிடம் சொல்லி அழுவது,
    தமிழ் வளர்த்த செம்மல்கள் எங்கே?
    அய்யகோ!
    யாரிடம் புகல?
    வாழ்க தமிழ், இணையத் தமிழ்!
    முக்கியமாக தமிழ் மிரர் தமிழ், கடலோசை போல் முழங்கட்டும்.

    Reply : 0       0

    xntgson Sunday, 09 January 2011 08:57 PM

    நான் ஒன்றும் பெரிய மனிதன் அல்லன், நகைச்சுவைக்காக சொன்னேன்!
    பொதுவாக நான் அழைப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை நேரில் வழங்கப்படாவிட்டால்!
    ஆமா...ங்கூக்கும்!
    மாநாடு வெற்றி பெற என் வாழ்த்துகள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .