2025 ஜூன் 25, புதன்கிழமை

அஸாத் சாலி வெளிநாடுசெல்வதை தடுக்க நீதவான் உத்தரவு

Super User   / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அஸாத் சாலி,  வெளிநாடு செல்வதை தடுக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனக்கு பதவி உயர்வொன்றை பெற்றுத்தருவதற்காக 600,000 ரூபா பணம்பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் என சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில்  செய்த முறைப்பாடு தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மற்றொரு சந்தேக நபரான பாத்திமா ரிஸானா எனும்பெண்ணும் வெளிநாடு செல்வதை தடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்விரு சந்தேக நபர்கள் தொடர்பாக இதேபோன்ற 8 முறைப்பாடுகள் உள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். 

முல்லேரியாவில் வசிக்கும் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். தனது சகோதரி, கொழும்பு  3 இல் வசிக்கும் பாத்திமா ரியானா என்பவருக்கு அறிமுகமானதாகவும் ரியானா மூலம் அஸாத் சாலி தனக்கு அறிமுகமானதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பதவியுயர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்து அஸாத் சாலி தனது பிரசாரங்களுக்காக 700,000 ரூபா கேட்டதாகவும்; பொலிஸாரிடம் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். எனினும் 02.02.2010 ஆம் திகதி பாத்திமா ரியானா முன்னிலையில் தான் அஸாத் சாலிக்கு 600,000 ரூபா வழங்கியதாகவும் எனினும் உறுதியளித்தபடி தனக்கு பதவி உயர்வு பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் மனுவொன்றை தாக்கல் செய்த கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபர்கள் இருவரும் நாட்டைவிட்டுச் செல்ல முயற்சிப்பதாக  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறினர்.

இந்நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுக்குமாறு குடிவரவு மற்றும்  குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.  இவ்வழக்கு விசாரணை செப்டெம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • sakeena. Monday, 15 August 2011 08:08 PM

    வால் புடிக்கும்போதே நெனெச்சேன்.....

    Reply : 0       0

    hari Monday, 15 August 2011 08:52 PM

    பாவம் மனிசன் வார எலக்சனுல தலகாட்டமுடியாம பண்ணிட்டாங்க.

    Reply : 0       0

    xlntgson Monday, 15 August 2011 09:12 PM

    பதவி உயர்வுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்கு என்ன தண்டனை? முன்னாள் உதவி மேயருக்கு சிறை வாசம் என்றால் இலஞ்சம் கொடுத்தேனும் பதவி உயர்வு பெற முயற்சிக்கிறவர்கள் முயற்சியை கைவிடுவரோ? கெண்டை மாட்டும், சுறா தப்பிக்கும்?

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 15 August 2011 10:48 PM

    இதுக்குத்தான் இந்த மனிசன் இப்படி துடித்தாரோ பாவம் இப்ப அரசனும் இல்ல, புரிசனும் இல்லாத கதைதான்.

    Reply : 0       0

    asker Tuesday, 16 August 2011 06:43 PM

    அவர் செய்த நன்மையை பற்றி பேசுவோம். .......தினமும் medical camp செய்து எல்லா மாகாணத்துக்கும் சென்றாரே ..........இலவச மருத்துவம்.

    Reply : 0       0

    kalam Wednesday, 17 August 2011 04:56 PM

    சகோதரர் அஸ்கர் அவர்களே அதையும் இப்போ பேச முடியாது . ஏன் என்றால் அதையும் தேர்தல் விளம்பரத்துக்கு பாவித்து விட்டார் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .